கந்தர்வகோட்டை அடுத்த புதுநகர் ஊராட்சியில் இருந்து பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் தஞ்சை செல்லும் பேருந்தை புதுநகர் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து புதுநகர் வரை செல்லும் பேருந்தை நேற்று கந்தர்வகோட்டை எம்எல்ஏ மா.சின்னத்துரை திமுக வடக்கு ஒன்றிய செயலர் தமிழய்யா முன்னிலையில் தொடங்கி வைத்தார். இதில் உள்ளாட்சி நிர்வாகத்தினர், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.