அறந்தாங்கியை அடுத்த பாண்டிக்குடி கிரா மத்தை சேர்ந்தவர் முருகேசன் மனைவி பேபி சில்பா(29). அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை பணிக்கு மொபட்டில் சென்றார். களப்பகாடு பகுதியில் வந்தபோது, தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் காலில் பலத்த காயமடைந்த பேபி சில்பா அறந்தாங்கி அரசு மருத்துவமனை யில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவம னைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.