புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று இரவு பெய்த மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேங்கியுள்ள மழை நீரை நகராட்சி நிர்வாகம் அப்புறம் படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.