புதுகை, மாங்கோட்டை தெற்குபட்டியை சேர்ந்தவர் ஜெய பாண்டிமுத்து(26). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (அக். 14) மதுபோதையில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில், காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.