மீமிசல் அடுத்துள்ள கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து அப்பகுதி பொதுமக்கள் மீமிசல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.