புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் இன்று (அக்.21) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது. படகுகளை பாதுகாப்பான இடத்தில் கரையேற்றி வைக்கவும், மீன் பிடி உபகரணங்களைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்ளவும் மீன்வளத்துறை அறிவித்துள்ளது.