சிங்காரபேட்டை: கடப்பாரை ஆற்றிலிருந்து மதகுகளை ஆய்வு செய்த ஆட்சியர்.
சிங்காரபேட்டை: கடப்பாரை ஆற்றிலிருந்து மதகுகளை ஆய்வு செய்த ஆட்சியர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், சிங்காரப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட புளியானூர் ஏரிக்கு, ஜவ்வாது மலை அடிவாரத்தில் உற்பத்தியாகும் கடப்பாரை ஆற்றிலிருந்து மதகுடன் கூடிய கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு வர ஏதுவாக, அரசுக்கு கருத்துரு தயார்செய்து அனுப்புவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.