ஓசூரில் சிறுமி மீட்பு- மீண்டும் காணாமல் போன சிறுமி.

ஓசூரில் சிறுமி மீட்பு- மீண்டும் காணாமல் போன சிறுமி.;

Update: 2025-10-27 08:18 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பஸ் நிலையில் 16 வயது மதிக்க தக்க சிறுமி தனியாக சுற்றித்திரிந்து வந்த நிலையில் அந்த பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதை அடுத்து சிறுமியை ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் சிறுமி சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், 10 தினங்களுக்கு முன்பு சிறுமி காணாமல் போனது குறித்து அவரது தந்தை ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதை அடுத்து சிறுமியின் தந்தைக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சென்னை கொரட்டூர் போலீசார் சிறுமியின் தந்தையை அழைத்துக் கொண்டு ஓசூர் சென்றனர். இந்த நிலையில் ஓசூர் காவல் நிலையத்தில் உணவு சாப்பிட்டு கை கழுவச் செல்வதாக கூறி வெளியே சென்ற அந்த சிறுமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் சிறுமியை தற்போது வலைவீசி தேடி வருகின்றனர். காவல் நிலையத்தில் இருந்து சிறுமி தப்பியோடிய சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Similar News