மாலையில் பெய்த கன மழை
குமாரபாளையத்தில் கன மழை பெய்தது. குமாரபாளையத்தில் நேற்றுமுன்தினம் இரவு முழுதும் கன மழை பெய்தது.;
குமாரபாளையத்தில் கன மழை பெய்தது. குமாரபாளையத்தில் நேற்றுமுன்தினம் இரவு முழுதும் கன மழை பெய்தது. இதனால் நேற்று காலை முதல் மேக மூட்டம் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 06:00 மணியளவில் திடீரென சூழ்ந்த கருமேகங்களால் மழை பெய்தது. குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான காவேரி நகர். சின்னப்பநாயக்கன்பாளையம். தெற்கு காலனி. குப்பாண்டபாளையம். சாணார்பாளையம். மற்றும் தட்டாங்குட்டை. உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை செய்தது மழையின் காரணமாக சாலையில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. திடீரென பெய்த மழையின் காரணமாக குளிர்ச்சி நிலவியது.