மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா தீர்த்தகுடங்கள் ஊர்வலம்

குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா தீர்த்தகுடங்கள் ஊர்வலம் நடந்தது.;

Update: 2025-11-28 14:39 GMT
குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சௌந்தர்ராஜ பெருமாள், அருள்மிகு பஞ்சமுக மகாவீரா ஆஞ்சநேயர் திருக்கோவில் புனராவர்த்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று மகா கணபதி ஹோமத்துடன் நடந்தது. பவானி கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோவில் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. திண்டுக்கல் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் பங்கேற்றனர். இன்று மாலை ஸ்ரீமத் பரமஹம்சேத் யாதி ஸ்ரீரங்கபராங்குச பரகால நம்பி ராமானுஜ ஜீயர் சுவாமிகளின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறவுள்ளது. மாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி அழைத்து வருதல், முதல்கால யாகசாலை பூஜை நடைபெறவுள்ளது. நாளை இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜை, ஞானசம்பந்தம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. டிச. 1 காலை 06:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

Similar News