மரவள்ளிக் கிழங்கு விலை சரிவு: விவசாயிகள் கவலை.
மரவள்ளிக் கிழங்கு விலை சரிவு: விவசாயிகள் கவலை. டன்னுக்கு ரூ.500 வரை குறைந்தது.;
பரமத்தி வேலூர். டிச. 1: பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசப்பாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பிவருகின்றனர். கிழங்கு ஆலையில் மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்ற கடந்த வாரம் தாய்லாந்து வெள்ளைரக மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ. 6,200 க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.500 வரை விலை சரிவடைந்து ரூ.5,700 க்கு விற்பனையாகிறது. பர்மா ரோஸ் மற்றும் வெள்ளை ரக மரவள்ளிக் கிழங்கு டன் ரூ.5,900க்கு விற்பனையானது. தற்போது ரூ.5,400க்கு விற்பனையாகிறது. ரூ.5,600க்கு விற்பனையான முள்ளுவாடி ரக மரவள்ளிக் கிழங்கு தற்போது ரூ.5,100க்கு விற்பனையாகிறது. அதேபோல சிப்ஸ் தயாரிக்கும் தாய்லாந்து கருப்பு ரக மரவள்ளிக் கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.600 வரை விலை குறைந்து ரூ.6,400க்கு விற்பனையாகிறது. சிகப்பு ரக மரவள்ளிக் கிழங்கு டன்னுக்கு ரூ. 9 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை சரிவடைந்து டன் ஒன்று ரூ. 8 ஆயிரத்திற்கு விற்பனையானது. முள்ளுவாடி ரக மரவள்ளிக்கிழங்கு ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை சரிவடைந்து ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையானது. மரவள்ளிக்கிழங்கு விலை தொடர்ந்து சரிவடைந்துள்ளதால் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.