ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம்..
ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காட்டூர் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது இக்கோவிலில் முக்கிய விசேஷ நாட்கள் மற்றும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம் நடைபெறுவது வழக்கம். அதன்படி பௌர்ணமியை முன்னிட்டு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் உற்சவருக்கும் மூலவருக்கும் முத்தங்கி அலங்காரம் சாத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.