மார்கழி மாத பிறப்பு: வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 110 கிலோ வெண்ணெய்யை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.!;

Update: 2025-12-16 14:37 GMT
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு விசேஷ நாள்களில் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம், வெள்ளி கவசம், முத்தங்கி அலங்காரம், புஷ்ப அலங்காரம், வடை மாலை, வெற்றிலை மாலை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படும். காா்த்திகை, மாா்கழி, தை மாதங்களில் இரவு 7 மணிக்கு மேல் கோயில் நிர்வாகத்தால் சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு முன்னிட்டு சிறப்பு வெண்ணைக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. மாலை சுமார் 5 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை, சுமார் 110 கிலோ வெண்ணெய் மூலம் சுவாமியின் உடல் முழுவதும் அலங்காரம் செய்து வெண்ணெய்க்காப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வழிப்பட்டனர்.

Similar News