வேலகவுண்டம்பட்டி அருகே மூதாட்டி மயங்கி விழுந்து சாவு.

வேலகவுண்டம்பட்டி அருகே மூதாட்டி மயங்கி விழுந்து சாவு போலீசார் விசாரணை.;

Update: 2025-12-16 15:04 GMT
பரமத்தி வேலூர், டிச.16: நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே தட்டாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (65). இவரது மனைவி ரங்கம்மாள்( 60 ). இவர்களது மகன் அருள் முருகன் (37). லாரி டிரைவர். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்திருந்தனர். இந்நிலையில் ரங்கமாளும், அருள் முருகனின் சித்தி முத்துலட்சுமியும் அவர்கள் பயரிட்டுள்ள மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது மாலை 5 மணி அளவில் ரங்கம்மாள் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அதை பார்த்த முத்துலட்சுமி இது குறித்து அருள்முருகனுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் அருள் முருகன் ரங்கமாளை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரங்கம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அருள்முருகன் வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News