கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 01.02.2025 முதல் 14.02.2025 வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி முகாம்

2025-ஆம் ஆண்டு 01.02.2025 முதல் 14.02.2025 வரை இருவாரங்கள் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்குட்பட்ட கிராமங்களில் நடைபெறவுள்ளது.;

Update: 2025-01-28 13:54 GMT
பெரம்பலூர் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 01.02.2025 முதல் 14.02.2025 வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல். பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி இருவார முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 2025-ஆம் ஆண்டு 01.02.2025 முதல் 14.02.2025 வரை இருவாரங்கள் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்குட்பட்ட கிராமங்களில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 08 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசிப்பணி இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே அனைத்து கோழி வளர்ப்போர், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Similar News