பவானிசாகர் அருகே 100 நாள் திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

பவானிசாகர் அருகே 100 நாள் திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

Update: 2024-08-30 03:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பவானிசாகர் அருகே 100 நாள் திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் பவானிசாகர் அருகே 100 நாள் திட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள புங்கார் பஞ்சாயத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். தங்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க வழியுறுத்தியும், தினக்கூலி ரூ 301 க்கு பதிலாக ரூ 250 வழங்கியதால் ஆத்திரம் அடைந்த100 நாள் தொழிலாளர்கள் காலை வந்த பவானிசாகர் - பண்ணாரி செல்லும் சாலையில் காரச்சிக் கொரை என்ற இடத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பவானிசாகர் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள உரி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து 100 நாள் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் .இந்த சாலை மறியலில் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

Similar News