சத்தியமங்கலம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

சத்தியமங்கலம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

Update: 2024-08-28 05:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மலையடிபுதூர், எம். ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (45). கட்டிடத் தொழிலாளியான இவர் வீட்டின் அருகே நேற்று 13 வயது சிறுமி விளையாட்டு கொண்டிருந்தபோது சிறுமியிடம் நைசாக பேசி மறைவான இடத்திற்கு அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் கூறி உள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வடிவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் வடிவேல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News