ராணிப்பேட்டையில் 14 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கைது!

14 ஆண்டுகளாக தேடப்பட்டவர் கைது;

Update: 2025-06-18 06:30 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னதக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 34). அடிதடி, மணல் கடத்தல் உள்பட வழக்குகளில் தொடர்புடைய இவரை 14 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர். மாவட்ட துணை எஸ்பி இமயவர்மன் தலைமை யில் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ், போலீஸ்காரர் வினோத் உள்ளிட்டோர் நேற்று செல்வராஜை கைது செய்தனர். பின்னர் வாலாஜா கோர்ட்டில் ஆஜர் படுத்தி அவரை போலீசார் கிளை சிறையில் அடைத்தனர்.

Similar News