ஆம்பூரில் 15 லட்சம் கடன் வாங்கிகொண்டு தலைமறைவான மனைவி,கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு தாங்க முடியாமல் விஷம் குடித்த கணவன், ஆம்பூர் மருத்துவமனையில் அனுமதி..

ஆம்பூரில் 15 லட்சம் கடன் வாங்கிகொண்டு தலைமறைவான மனைவி,கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு தாங்க முடியாமல் விஷம் குடித்த கணவன், ஆம்பூர் மருத்துவமனையில் அனுமதி..;

Update: 2025-01-20 14:25 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 15 லட்சம் கடன் வாங்கிகொண்டு தலைமறைவான மனைவி,கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு தாங்க முடியாமல் விஷம் குடித்த கணவன், ஆம்பூர் மருத்துவமனையில் அனுமதி.. திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பிலால் நகர் பகுதியை சேர்ந்தவர் ஃபாரூக் இவருக்கு மன்சூரா பர்வீன் என்பவருடன் திருமணம் ஆகி 4 பிள்ளைகள் உள்ள நிலையில், மன்சூரா பர்வீன், தனக்கு தெரிந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பெயரில், சுய உதவிக்குழுக்கள் மற்றும் பல்வேறு வங்கிகளில் சுமார் 15 லட்சம் ரூபாய் கடனாக பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தாய் மற்றும் தந்தையுடன் தலைமறைவாகியுள்ளார்.. இந்நிலையில் கடன் கொடுத்த தனியார் வங்கி ஊழியர்கள், மற்றும் அக்கம் பக்கத்தினர் கடனை திருப்பி கேட்டதால், அதிக மன உளைச்சலுக்கு உண்டான ஃபாரூக் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார், உடனடியாக இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சையிற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிற்காக அனுமதித்தனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இச்சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.. மேலும் கடன் வாங்கிகொண்டு தாய் தந்தையுடன் தலைமறைவான மனைவி, கடன் தொல்லை தாங்காமல் கணவன் விஷம் குடித்த சம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Similar News