அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 1.525 கிலோ கிராம் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து
1.ஹான்ஸ் – 1.400 கிலோ கிராம் மற்றும் 2.விமல் பாக்கு -125கிலோ கிராம் என மொத்தம் 1.525 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல்;
அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 1.525 கிலோ கிராம் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி இன்று 29.07.2025 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் காவல்துறை நடத்திய சோதனையில் பெரம்பலூர் உட்கோட்டம் பெரம்பலூர் ஊரக காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட லாடப்புரம் கிராமத்தில் கதிரேசன் (49) த/பெ தியாகராஜன், சிவன்கோவில்தெரு, லாடப்புரம், பெரம்பலூர். என்பவர் தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் பெரம்பலூர் ஊரக காவல் நிலைய உதவி ஆய்வாளர் மேற்படி எதிரியை கைது செய்து எதிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரிடமிருந்து 1.ஹான்ஸ் – 1.400 கிலோ கிராம் மற்றும் 2.விமல் பாக்கு -125கிலோ கிராம் என மொத்தம் 1.525 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் ஊரக காவல் துறையினர். இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும்.