ஆர்.டி மலை ஸ்ரீ விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் கார்த்திகை மாதம் 2 ஆவது சோமாவார விழா
சங்காபிஷேகம் சிறப்பு பூஜையில் பக்தர்கள் வழிபாடு;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி மலை ஸ்ரீ விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் கார்த்திகை மாதம் 2 ஆவது சோமாவாரம் மற்றும் சங்கரபிஷேகம் பூஜைகள் இன்று நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் ஆராதனை நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஸ்ரீ கந்த சுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் வேதரத்தின் சிவம் செய்திருந்தனர்.