மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் கலிங்கா 2024 விளையாட்டுப் போட்டி தொடக்க விழா

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் கலிங்கா 2024 விளையாட்டுப் போட்டிகள் 2000 மருத்துவ மாணவர்கள் பங்கேற்பு

Update: 2024-07-23 08:30 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பாக கலிங்கா 2024 விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா நிகழ்ச்சி ஆதிபராசக்தி மருத்துவமனையில் நிர்வாக அறங்காவலர் கோ. ப. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் கபடி கைப்பந்து கோகோ கூடைப்பந்து பூ பந்து கேபிள் டென்னிஸ் 100 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் தமிழகத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளை சார்ந்த 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவசக்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அகத்தியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு வெற்றிக் கோப்பைகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படும்.

Similar News