துணிவு மற்றும் வீர தீர சாகசச் செயல்புரிந்த மகளிருக்கான ‘கல்பனா சாவ்லா விருது 2025” வழங்கபபடவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்

துணிவு மற்றும் வீர தீர சாகசச் செயல்புரிந்த மகளிருக்கான ‘கல்பனா சாவ்லா விருது 2025” வழங்கபபடவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்;

Update: 2025-06-04 13:21 GMT
2025 -ஆம் ஆண்டிற்கான சுதந்திர தின விழாவின் போது, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால், ஏதவாது ஒரு துறையில் துணிவு மற்றும் வீர தீர சாகசச் செயல்புரிந்த மகளிருக்கான ‘கல்பனா சாவ்லா விருது 2025” வழங்கப்பட உள்ளது. விருதுகளுடன் ரூ.5,00,000/- ரொக்கப்பரிசு (ம) சான்றிதழும் வழங்கப்படுகிறது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விதிமுறைகள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஏதவாது ஓரு துறையில் துணிவு மற்றும் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும் இவ்விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன் விவரக் குறிப்பு மற்றும் ஆவணங்களுடன் (https://awards.tn.gov.in) என்ற இணைதள முகவரியில் 16.06.2025 -ற்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேற்காணும் விண்ணப்ப விவரங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 20.06.2025-க்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது மேலும், தொடர்புக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம். 04562-252701 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Similar News