சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ. 23 லட்சம் நிதி வழங்கிய 2009 பேட்ச் காவல் நண்பர்கள்!

திருப்பூர்-சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ. 23 லட்சம் நிதியினை 2009 பேட்ச் காவல் நண்பர்கள் வழங்கினார்கள்.;

Update: 2024-08-30 10:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 23 லட்சம் நிதி வழங்கிய 2009 பேட்ச் காவல் நண்பர்கள். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சேர்ந்தவர் அருள் குமார். இவர் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார் இவர் கடந்த ஜனவரி மாதம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ள நிலையில் வருமான வாய்ப்பின்றி தவிக்கும் இவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் 2009 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த நண்பர்கள் ஒன்றிணைந்து 23 லட்சத்தி 89 ஆயிரம் ரூபாய் நிதியை காவலர் அருள் குமார் குடும்பத்தினரிடம் வழங்கினர். காவல் நண்பர்களின் உதவியை பெற்றுக் கொண்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுத கட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. 2009 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் இதுவரை 28 காவலர் குடும்பங்களுக்கு நிதி அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News