அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 2.500 கிலோ கிராம் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து
ஹான்ஸ் 8 பண்டல் – 2.500 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த மங்களமேடு காவல் துறையினர்.;
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 2.500 கிலோ கிராம் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் மங்களமேடு உட்கோட்டம் மங்களமேடு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பழைய அரசமங்கலம் கிராமத்தில் *சுப்பரமணியன் (52) த/பெ துரைராஜ், காந்தி நகர், பழைய அரசமங்கலம், குன்னம் வட்டம், பெரம்பலூர் மாவட்டம்.என்பவர் தனக்கு சொந்தமான சித்ரா பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் தனிப்படையினர் மேற்படி எதிரியை கைது செய்து மங்களமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மங்களமேடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்கள் மேற்படி எதிரி மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து ஹான்ஸ் 8 பண்டல் – 2.500 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த மங்களமேடு காவல் துறையினர்.