வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டது..

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டது..

Update: 2024-07-24 16:40 GMT
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டது... வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் ஏராளமான ஆச்சர்யமூட்டும் பல்வேறு தொன்மையான பொருட்கள் கிடைக்கப்பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 5 அடி ஆழத்தில் செங்கல் கட்டுமானம் கண்டறிப்பட்டுள்ளது. 3 குழிகளில் 5க்கும் மேற்பட்ட பழமையான செங்கள் களிமண்ணால் கட்டப்பட்ட செங்கல் கட்டுமானம் சிதைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. இவை தொன்மையான மனிதர்களின் குடியிருப்புகளாக இருக்கலாம் என கூறும் தொல்லியல் துறையினர் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுத்தளம் முன்னோர்களின் வாழ்விடப் பகுதி என்பதை உறுதி முடியும் என தெரிவித்துள்ளனர்.

Similar News