
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டியில் மாரியம்மன் கோவில் அருகில் 3 பேர் போதை ஊசி, மருந்துகளை பயன்படுத்தியது தெரிய வந்தது. அந்த பகுதியை நோட்டமிட்ட கொண்டலாம்பட்டி போலீசார், 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கொண்டலாம்பட்டியை சேர்ந்த சபரிகணேசன் (வயது 19), ராம்கி (19), சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதை ஊசி, மருந்துகள், கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.