ஈரோட்டில் 3 இடங்களில் 2வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை

ஈரோட்டில் 3 இடங்களில் 2வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-06 13:48 GMT

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

ஈரோடு பழையபாளையத்தில் செயல்பட்டு வரும் RR துளசி கட்டுமான நிறுவனம் மற்றும் ரெடிமிக்ஸ் நிறுவனத்தில் நேற்று மாலை முதல் கோவையில் இருந்து வந்த 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2 ம் நாளாக இன்றும் கட்டுமான நிறுவனம் , உரிமையாளர் சக்திவேல் வீடு உள்ளிட்ட பகுதிகளில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிறுவனம் அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் பல்வேறு அரசு கட்டுமான ஒப்பந்தங்களை எடுத்து இந்த நிறுவனம் பணிகளில் ஈடுபட்டு வந்ததும் ,

குறிப்பாக ஈரோட்டில் புதியதாக அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டிடம் , பெரும்பள்ளம் ஓடை என பல்வேறு அரசு ஒப்பந்த கட்டுமான பணிகளையும் , தனியார் கட்டுமானங்களை இந்த கட்டுமான நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News