ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது தாயார் இவர்களது வீட்டில் வைத்து ஆடு வளர்த்து வரும் நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆட்டு கொட்டகையில் இருந்த 30,000 மதிப்புள்ள ஆடு ஒன்று திருடப்பட்டது தெரியவந்தது. திருட்டு குறித்து ஆண்டிபட்டி போலீசார் நேற்று (ஏப்.25) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.