தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 3500 போலீசார்

மக்களவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Update: 2024-04-18 14:44 GMT

மாவட்ட எஸ்பி

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 14 டி.எஸ்.பிக்கள், 58 இன்ஸ்பெக்டர்கள், 416 எஸ்.ஐக்கள்,

8 கம்பெனி துணை இராணுவத்தினர், ஒரு கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர் காவல் படையினர், முன்னாள் இராணுவத்தினர், தீயணைப்பு படையினர், ஓய்வு பெற்ற காவல்துறையினர் உட்பட 3500 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News