வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-05-26 13:28 GMT

வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா சாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (28). இவரை ஆற்காடு தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்யக்கோரி எஸ்பி கிரண் ஸ்ருதி, கலெக்டருக்கு பாிந்துரை செய்தார். இதனையடுத்து சத்தியமூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News