மரத்தில் மோதிய ஐயப்ப பக்தர்கள் கார் . 4 பேர் காயம்.

ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் மரத்தில் மோதியதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-12-17 09:09 GMT
மரத்தில் மோதிய கார் .
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆந்திர மாநிலம் ஈச்சனாரி பகுதியை சேர்ந்தவர்  பிரகாஷ் (33). டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர்கள்  சுரேந்திர ரெட்டி (25),  துளசி (25), கார்த்திக் (26).  ஐயப்ப பக்தர்களான இவர்கள் 4 பேரும்  நேற்று முன்தினம் காரில் சபரிமலை சென்றுள்ளனர். அங்கு தரிசனம் முடித்து விட்டு  கன்னியாகுமரிக்கு வர முடிவு செய்தனர்.

காரில் வந்த அவர்கள் 4 பேரும் தக்கலை தாண்டி நேற்று வந்து கொண்டு இருந்தனர்.‌ காரை பிரகாஷ் ஓட்டினார்.       நாகர்கோவில் அருகே கள்ளியங்காடு பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய கார் ரோட்டோரம்  நின்ற மரத்தில் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் காரில் இருந்த டிரைவர் உள்பட ஐயப்ப பக்தர்கள் 4 பேரும் காயம் அடைந்தனர்.        உடனடியாக அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். 

அங்கு  பிரகாஷ், சுரேந்திர ரெட்டி, துளசி ஆகிய 3 பேருக்கும் முதலுதவி வழங்கப்பட்டது.     

 பலத்த காயமடைந்த கார்த்திக் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக களியங்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து இரணியல் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News