கள்ளத்தனமாக லாட்டரி விற்ற 4 பேர் கைது

குளித்தலை போலீசார் வழக்கு பதிவு

Update: 2024-10-01 09:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சுங்ககேட், நெய்தலூர் காலனி, முதலைப்பட்டி ஆகிய பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் லாட்டரி சீட்டு பெற்ற செந்தில்குமார் (50), குசலவன் (65), ஏழுமலை (53), முருகானந்தம் (31) ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 40 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Similar News