ஓசூரில் கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது.
ஓசூரில் கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் டவுன் போலீசார் ராயக்கோட்டை சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம் படும்படி வகையில் நின்ற 4 பேரை போலீசார் சோதனையிட்ட போது அவர்களிடம் 200 கிராம் கஞ்சா, ஒரு கத்தி வைத்திருந்தது தெரியவந்தது. இதையெடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ஓசூர் பாலாஜி நகர் காளிதாஸ் (29) ரவிக்குமார் (24) ஓசூர் நீலமேக நகர் கண்ணன் (25) கார்த்திகேயன் (22) ஆகிய நான்கு பேர் என தெரியவந்தது. இதை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.