திருப்பூரில் 4 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட ஆணின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு. வட மாநில இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு.
திருப்பூரில் நான்கு நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட ஆணின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு. வட மாநில இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு. திருப்பூர் பகுதியில் பரபரப்பு;
திருப்பூர் பிச்சம்பாளையம் புதூர் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள மசூதிக்கு பின்புறம் உள்ள நிட்டிங் கம்பெனியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கம்பெனி கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது. அதை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அழுகிய நிலையில் கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சடலம் கிடந்த தனியார் நெட்டிங் கம்பெனி குரு சங்கர் என்பவருக்கு சொந்தமானது என்றும் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது மேலும் குரு சங்கரின் நண்பர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் அடிக்கடி அங்கு வந்து சென்றதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 19ம் தேதி குரு சங்கர் ஊருக்கு சென்றிருந்த நிலையில், கம்பெனிக்கு வந்த காமராஜ் அங்கு பணிபுரிந்த வடமாநில தொழிலாளர் பப்புஸ் என்பவருடன் சேர்ந்து அன்றைய தினம் முழுவதும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், பப்புஸ் அருகில் இருந்த சுத்தியலை எடுத்து காமராஜின் தலையில் தாக்கியுள்ளதாகவும் இதில் சம்பவ இடத்திலேயே காமராஜர் உயிரிழந்துள்ளதாகவும், இதனையடுத்து பப்புஸ் தப்பி ஓடி உள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார் தப்பி ஓடிய பப்புசை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.