சந்திராயன் - 4, 2028-ல் ஏவப்படும் : இஸ்ரோ தலைவர்

கன்னியாகுமரி;

Update: 2025-03-08 12:45 GMT
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் நடைபெற்ற தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ,       அனைத்து துறையிலும் பெண்கள் முன்னேற வேண்டும் , ஆண் பெண் பாகுபாடு பார்க்காமல் திறமையை பார்த்து வாய்ப்பு வழங்கப்படும் நிறுவனம் இஸ்ரோ , சந்திரயான் 4 திட்டம் மூலம் நிலவில் தரை இறங்க அங்கிருந்து தாது மற்றும் கனிமங்களை எடுத்து வந்து ஆராய்ச்சி செய்ய உள்ளோம்.  9200 கிலோ எடை கொண்ட சந்திராயன் - 4 இரண்டு ராக்கெட்  செலுத்தப்பட உள்ளது. 2028 இல் திட்டம் நடைபெறும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.       சர்வதேச கூட்டு முயற்சி என்பது தேவை தான் , நாசா - இஸ்ரோ சிந்தட்டிக் அப்ரேசெச்சர் என்ற செயற்கைகோள் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் கூட்டு முயற்சி மூலம் தயாராகி வருகிறது. ஜி-20 நாடுகளுக்கான ஜி- 20 செயற்கைகோள் தயார் செய்ய உள்ளோம். இது நமது தலைமையில் நடைபெற்று வருகிறது.      மீனவர்களுக்கு என்று பிரத்தியேக செயலி உருவாக்கப்பட்டு அது பயன்பாட்டில் உள்ளது , இதில் சர்வதேச எல்லை எங்கு உள்ளது , மீன்கள் எங்கு அதிக அளவில் உள்ளது  ,வானிலை எப்படி உள்ளது போன்ற பல தகவல்கள் நேரடியாக தெரிவிக்கப்பட்டு வருகிறது இதனை மீனவ மக்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்  நிலவில் 8 விதமான தாதுகள் மற்றும் கனிமங்கள் உள்ளது என்பதை கண்டுபிடித்து உள்ளோம்.      சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை கடக்கும் முன் இந்தியா வல்லரசு ஆகும் அதற்கான அனைத்து வேலைகளையும் இஸ்ரோ நிச்சயம் செய்யும் என கூறினார்.

Similar News