மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 481 மனுக்கள்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 481 மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.;
அரியலூர், ஆக.19 - அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தல், 481 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி, பொதுமக்களிடம் கோரிக்கைளை கேட்டறிந்து அவர்கள் அளித்த மனுக்கள் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.