வாலிபர் கொலையில் ஒருவரிடம் விசாரணை - 5 தனிப்படைகள் அமைப்பு

திண்டுக்கல்லில் வாலிபர் கொலையில் ஒருவரிடம் விசாரணை - 5 தனிப்படைகள் அமைப்பு

Update: 2024-09-30 04:56 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல், பேருந்து நிலையம் அருகே பாலாஜி பவன் எதிரே பென்சனர் தெரு பகுதியில் திண்டுக்கல் பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த முகமது இர்பான் என்பவரை நேற்று இரவு மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக முத்தழகு பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சிக்கி உள்ளார். சந்தேகத்தின் பேரில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் ASP. சிபின், DSP. சிபி சாய் சௌந்தர்யன் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, S.P. தனிப்படை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சார்பு ஆய்வாளர் ரவிசங்கர், நகர் குற்றத் தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் வீரபாண்டியன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Similar News