திருப்பாலபந்தல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூவனூர் கிராமத்தில் இரங்காடு என்ற இடத்தில் மர்மமான முறையில் மயில்கள் 06 இறந்து அழகிய நிலையில் கிடந்துள்ளது. இது தொடர்பாக கிராம மக்கள் தெரிவித்த தகவலின் பேரில் திருப்பாலபந்தல் காவல்துறையினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் மயில்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.