பரமத்திவேலூரில் ரூ.6½ லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.6½ லட்சத்துக்கு தேங்காய் ஏலம் போனது.;
பரமத்திவேலூர்,நவ.19: பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்திற்கு சோழசிராமணி, ஜேடர்பாளையம், கபிலர்மலை, பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், அண்ணாநகர், பாண்டமங்கலம், பரமத்தி, பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தென்னை விவசாயிகள் தேங்காய்களை கொண்டு வருகின்றனர். தேங்காய்களை ஏலம் எடுக்க நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயி ரத்து 610 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஏலத் திற்கு 11 ஆயிரத்து 250 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.61.61-க்கும், குறைந்தபட்சமாக ரூ.48.90-க்கும், சராசரியாக ரூ.57.57-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 47 ஆயிரத்து 662-க்கும் ஏலம் நடைபெற்றது.