சிவகங்கை பள்ளி வேன் மீது கார் மோதி விபத்து 7 மாணவிகள் காயம்

சிவகங்கை எஸ்.புதூர் அருகே பள்ளி வேன் மீது கார் மோதியதில் 7 மாணவிகள் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

Update: 2024-08-22 10:17 GMT
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் அருகே முசுண்டபட்டி, திருமலைக்குடி, குளத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகேயுள்ள பில்லுப்பட்டி தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இன்று திருமலைக்குடி அருகே பள்ளி வேன் சென்றபோது, வேன் மீது எதிரே வந்த கார் மோதியது. இதில் பள்ளி வேன் ஓட்டுநர் செல்வராஜ் மற்றும் 7 மாணவிகள் காயமடைந்தனர். காயமடைந்தோரை மீட்டு 108 ஆம்புலனஸ் மூலம் எஸ்.புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Similar News