டாக்டர் அப்துல்கலாம் நினைவு நாளில் 74 வது முறையாக இரத்தம் கொடை வழங்கி உதவிய குருதி கொடையாளர்.

பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளையின் பொருளாளர் க.மகேஸ்குமரன் என்பவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் 74 வது முறையாக இரத்தம் கொடை வழங்கி உதவினார்.;

Update: 2025-07-28 01:49 GMT
பெரம்பலூரில் டாக்டர் அப்துல்கலாம் நினைவு நாளில் 74 வது முறையாக இரத்தம் கொடை வழங்கி உதவிய குருதி கொடையாளர். டாக்டர் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு 2026 சூலை 27 அன்று பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆலத்தூர் வட்டம் இரூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபரின் அறுவை சிகிச்சைக்கு . பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளையின் பொருளாளர் க.மகேஸ்குமரன் என்பவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் 74 வது முறையாக இரத்தம் கொடை வழங்கி உதவினார். இவரின் இந்த செயலுக்கு அறக்கட்டளை தலைவர் ஜெயராமன், உதிரம் நாகராஜ், சபரி துரைராஜ், செங் குணம் குமார் அய்யாவு, பெரம்பலூர் ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை அருண் ஆப்ரஹாம் உட்பட பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளையின் குருதி கொடையாளர்கள் என பலரும் வாழ்த்தினர்.

Similar News