திருச்செங்கோடு அருகே 80 கிலோ எடையுள்ள 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் இரண்டு பேர் கைது

திருச்செங்கோடு அருகே 80 கிலோ எடையுள்ள 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் இரண்டு பேர் கைது

Update: 2024-09-28 04:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் ஒக்கிலிப்பட்டி பகுதியில் வசந்தகுமார் என்பவரது வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பெருமளவுபதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகஊரக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து வசந்தகுமார் வீட்டுக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை நடத்தியதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 80 கிலோ எடை கொண்ட குட்கா பொருள் மூட்டைகளை கைப்பற்றினார்கள்.மேலும் அங்கிருந்தஒக்கிலிப்பட்டியைச் சேர்ந்த வசந்தகுமார்,மற்றும் கருவேப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான்அன்று இருவரையும் கைது செய்த போலீசார் 80 கிலோ எடை கொண்ட குற்றப்பொருள்களையும் பறிமுதல் செய்தனர் கைது செய்யப்பட்ட இருவரும் நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News