10 சவரன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்கள் கைது

மதுராந்தகம் அருகே 10 சவரன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்கள் கைது

Update: 2024-03-31 14:44 GMT
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அணைக்கட்டு காவல் நிலையத்துக்கு உட்பட்ட விழுதமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் முருகேசன் என்பவர் வீட்டில் நான்கு நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்க நகைகள் கொள்ளையடித்து சென்றனர்.. இதன் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் வடக்கு வாயலூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (25 )மற்றும் சேவூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (24 )இருவரும் சென்னை ஓட்டேரி பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று அவர்களை கைது செய்து அவரிடம் இருந்த 10 சவரன் தங்க நகை பறிமுதல் செய்து செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.. இவர்கள் இருவர் மீதும் திருட்டு குற்ற சம்பவங்கள் வழக்குப்பதிவு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
Tags:    

Similar News