பணகுடி அருகே 10 அடி மலைப்பாம்பு லாவகமாக பிடிப்பு
பணகுடி அருகே 10 அடி மலைப்பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் விட்டனர்.
Update: 2024-04-27 04:54 GMT
பணகுடி அருகே 10 அடி மலைப்பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் விட்டனர்.
பணகுடி அருகே உள்ள வீரபாண்டியன் அனுமான் நதி பாலம் அருகில் நேற்று (ஏப்.26) சிங்கதுரை என்பவரின் செங்கல் சூலையில் மலைப்பாம்பு பதுங்கி இருப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்புவை லாவகமாக பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.