100% வாக்களிக்க மாவட்ட தேர்தல் அலுவலர் வேண்டுகோள் !

100% வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-04-18 12:15 GMT

பிருந்தாதேவி

சேலத்தில் நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவில் வாக்காளர்கள் 100% வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி, அஞ்சலக கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம், அரசு பணியாளர் அடையாள அட்டை, வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, இந்திய கடவுச்சீட்டு உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்காளர் அடையாளச் சான்றாக கொண்டு வாக்களிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News