சேலம் அருகே108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்

சேலம் அருகே108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம். பெண் குழந்தை பிறந்தது.

Update: 2024-04-19 06:28 GMT

ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்

சேலம் அருகே உள்ள ஜருகுமலை பகுதியை சேர்ந்தவர் தீபா (வயது 22). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவருக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் மருத்துவ உதவியாளர் மூலம் தீபாவிற்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், குழந்தையும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News