பறிமுதல் செய்யப்பட்ட 1156 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் அழிப்பு !

பறிமுதல் செய்யப்பட்ட 1156 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டன.

Update: 2024-07-05 07:01 GMT

புகையிலைப் பொருட்கள் அழிப்பு 

பெரம்பலூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 1156 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டன..... தமிழக அரசு பான் மசாலா குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்யவும் , பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்ட நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை மூலம் ஆய்வு மேற்கொண்டதில் கடைகளில் விற்பனை மற்றும் வாகனங்களில் கடத்தப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 1150 கிலோ எடை கொண்ட குட்கா , பான் மசாலா புகையிலை போன்ற போதை வஸ்துகள் அனைத்தும், பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கு பகுதியில் ஜேசிபி எந்திரம் மூலம் குழி தோண்டி , மாவட்ட ஆட்சியர் கற்பகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி ஆகியோர் முன்னிலையில் கொட்டி தீயிட்டு அழிக்கப்பட்டு மன்னை கொட்டி மூடப்பட்டன. இந்த நிகழ்வின்போது பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் , உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கவிகுமார், நகராட்சி ஆணையர் ராமர், உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் காவல்துறையினர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News