புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் விடுதலை!

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து ஊர்க்காவல்துறை உத்தாவிட்டுள்ளது.

Update: 2024-01-26 13:03 GMT

பைல் படம்

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து ஊர்க்காவல்துறை உத்தாவிட்டுள்ளது. இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி உள்ளது. மேலும் தமிழக மீனவர்களின் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துகொள்கின்றனர்.இந்த நிலையில் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி நெடுந்தீவு கடற்பரப்பு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவர்களை விடுதலை செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில், இலங்கை கடற்படை சிறை பிடித்துச் செல்லப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற கஜநிதிபாலன் இதையடுத்து விடுதலையான தமிழக மீனவர்கள் 12 பேரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் ஓரிரு நாள்களில் தமிழகம் வரவுள்ளனர்.

Tags:    

Similar News