சரக்கு ரயிலில் வந்தது 1300 டன் அரிசி

ஆந்திராவில் இருந்து ரேஷன் கடைகளுக்கு 1300 டன் அரிசி புதுக்கோட்டை வந்தடைந்தது.

Update: 2024-06-29 08:49 GMT

சரக்கு ரயிலில் வந்தது 1300 டன் அரிசி

ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக 1300 டன் அரிசி 21 பெட்டிகளில் ரயில் மூலமாக புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. மத்திய மாநில அரசு பங்களிப்புடன் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஆந்திராவில் இருந்து 21 பெட்டிகளில் ரயில் மூலமாக 1300 டன் ரேஷன் அரிசி புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இதனை புதுக்கோட்டை நுகர்பொருள் வாணிப கிடங்கு அதிகாரிகள் லாரிகள் மூலமாக நுகர் பொருள் வாணிப கிடங்கிற்கு எடுத்துச் சென்றனர். இதனை அடுத்தடுத்த மாதங்களில் ரேஷன் கடைகளுக்கு லாரிகள் மூலமாக அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

Tags:    

Similar News